திங்கள், 1 ஆகஸ்ட், 2011

காலி

 அழகிய நேர்த்தியான
வேலைப்பாட்டுடன் மிளிர்கிறது அது....
கூடவே கூடுதலாய்
பகட்டுத்தனமும் திமிரும்...
அதற்கென உயிரேதுமில்லை...
உணர்வும் இருப்பதாகத் தெரியவில்லை...
வாக்கெடுப்பில் வென்றால்

அதில் அமர்ந்துகொள்ளலாம்...

அமர்வதற்கோ ஆட்டுவிப்பதற்கோ
வேறு எந்தத் தகுதியும் தேவையில்லை...
அது அதை எதிர்பார்ப்பதுமில்லை...

தேர்ந்தெடுக்கப்பட்ட வல்லூறுகள்
அதில் அமர்ந்துகொண்டே
வாக்களித்த சடலங்களைக்
கூறுபோட்டு உண்ணலாம்....

வெ(ற்)றிக் கூத்தாடியபடியே
சிலகாலம் அதிலேயே ஓய்வெடுக்கலாம்...
கூத்து ஓயும்வரை கூட...

இப்பொழுதும் கூட
நமட்டுச் சிரிப்பு சிரிக்கிறது
அந்த நாற்காலி...
இன்று அமர்பவர்களும்
இனியொரு நாற்’காலி’ யென்று...  

நீதி :  1) பல்லக்கில் வைத்தாலும் பாம்பின் குணம் மாறாது...
          2) வழியெங்கும் மாலை, மரியாதை - சுடுகாட்டுப்பிணம்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக