அழுகும் உடலிதென ஆசை துறந்தாய்
எழுக யின்னுயிரென் றேங்கித் தீய்ந்த
கழுமரத்தின் கண்ணீர் காண்...
ஏசுகின்ற நாவுக்குத் தேன்குடிக்கத் தந்திடு
தூசுபோ லிவ்வுலகு வாழ்க்கைப் பிறர்க்கென்ற
நேசம் விதைத்திடு வேசம் தவிர்த்திடென்ற
ஏசனே தெய்வம் நமக்கு
செறிவுமிக்க அன்பே செயற்கறு வித்து
அறிவுசால் அன்பூன்றி ஆக்கம்கொள் என்றும்
தெரிவிக்கு மிவ்வுயிர் ரெல்லார்க்கும் புனித
கிறித்துமஸ் நன்னாளின் வாழ்த்து