வெள்ளி, 24 செப்டம்பர், 2010
பொய்...
(நண்பர் துரையவர்கள் வரிகளின் பாதிப்பில்... )
மேலும் தொடரவழியற்று
தத்தளிக்கிறது வாழ்க்கை...
வறுமை பிச்சை கேட்டது..
பணமோ
வறுமைக்குப் பிச்சையிடத்
தயாராயில்லை...
மறுக்க முடியவில்லை...
இயலாமை நெஞ்சில் சாட
வழியற்று வாழ்வு
இரையாகிவிடுகிறது...
பொதிந்துவிடுகிறது அந்த
முகமூடிக்குள்...
யாருக்காகவோ எதற்காகவோ
தோண்டப்பட்ட குழி..
இடுகாட்டில் சிரித்தபடி... ..
என்னாலும் முடிகிறது
உதடுகள் சிரித்தபடி...
உண்மைகள் அழுதபடி...
என்னசெய்ய..?
பொய்ப்பிம்பங்கள்
மனதைச் சாட
வெட்கி மனம் நொந்து
வழியின்றி அணிந்துகொள்கிறேன்...
அந்த முகமூடி..
விற்கவோ... வாங்கவோ...
பேசவோ... ஏசவோ...
பாசத்திற்கும் நேசத்திற்கும்கூட
தேவைப்படுகிறது
இந்த முகமூடி...
வாழ்வின் அத்தியாவசியத்
தேவைகளாய் அது
லாடம் கட்டப்பட்டுவிட்டது...
இனித் தவிர்க்கவியலாது...
சுயலாபத்திற்காக பிஞ்சிலேயே
பொருத்தப்பட்டுவிடுகிறது..
பொய் எனும்
அந்த முகமூடி...
திங்கள், 13 செப்டம்பர், 2010
லஞ்சமெனும் பரிகாரம்
தகுதிக்கு மீறின ஆசைகளுடன் ...
கற்பனைகளுடன் அந்த
வழிபாடுகள் தொடங்கின...
"மதிப்பெண் குறைவுதான் என்றாலும்
மருத்துவனாகனும் என் மகன்..."
"அரசுப்பணி எனக்கே எனக்கு
அள்ளித்தா பாரதமாதா..."
"இந்த முறையேனும் அந்த
இனிய வாய்ப்பு தாராய்.." யென
ஏழைகள் சலுகைகளையும்
ஏய்த்துப் பிடுங்கவும்கூட
பல்வேறு திசைகளிலிருந்தும்
பல்லாயிரம் வேண்டுதல்கள்...
"சாமியால் ஆவதில்லை - ஒரு
சாத்தானால் ஆவதுண்டு... "
சாமிகோவில்ப் பூசாரி பணத்திற்காய்
சாத்தான் பூசாரியானான்..
கூட்டம் முண்டியடித்தது...
பணம் கொடுத்தால்
பத்தும் நடக்குமென
பரிகாரம் சொன்னான் சாத்தான்..
பெட்டிகள் கைமாறின...
சில கருப்பாய் இருந்தன...
"பரவாயில்லை....
லஞ்சப்பணமிது... இதில்
கருப்பென்ன சிவப்பென்ன..?"
சிரித்தான் சாத்தான்..
அருகே
கதறிக்கொண்டிருந்த பெண்ணை
கத்தியால் குதறியபடி
உதிரம் உறிஞ்சி
ஆளுக்கொரு குவளை கொடுத்துத்
தினந்தோறும் பருகச் சொன்னான்...
இப்பொழுது எல்லாச் சாத்தான்களும்
உதிரம் உறிஞ்சிக் குடித்தபடி
மட்டற்ற மகிழ்வுடன் வெளியேறின....
ஆனால் பாவம்...
அங்கே குற்றுயிரும்
குலையுயிருமாய் பரதமாதா....
கற்பனைகளுடன் அந்த
வழிபாடுகள் தொடங்கின...
"மதிப்பெண் குறைவுதான் என்றாலும்
மருத்துவனாகனும் என் மகன்..."
"அரசுப்பணி எனக்கே எனக்கு
அள்ளித்தா பாரதமாதா..."
"இந்த முறையேனும் அந்த
இனிய வாய்ப்பு தாராய்.." யென
ஏழைகள் சலுகைகளையும்
ஏய்த்துப் பிடுங்கவும்கூட
பல்வேறு திசைகளிலிருந்தும்
பல்லாயிரம் வேண்டுதல்கள்...
"சாமியால் ஆவதில்லை - ஒரு
சாத்தானால் ஆவதுண்டு... "
சாமிகோவில்ப் பூசாரி பணத்திற்காய்
சாத்தான் பூசாரியானான்..
கூட்டம் முண்டியடித்தது...
பணம் கொடுத்தால்
பத்தும் நடக்குமென
பரிகாரம் சொன்னான் சாத்தான்..
பெட்டிகள் கைமாறின...
சில கருப்பாய் இருந்தன...
"பரவாயில்லை....
லஞ்சப்பணமிது... இதில்
கருப்பென்ன சிவப்பென்ன..?"
சிரித்தான் சாத்தான்..
அருகே
கதறிக்கொண்டிருந்த பெண்ணை
கத்தியால் குதறியபடி
உதிரம் உறிஞ்சி
ஆளுக்கொரு குவளை கொடுத்துத்
தினந்தோறும் பருகச் சொன்னான்...
இப்பொழுது எல்லாச் சாத்தான்களும்
உதிரம் உறிஞ்சிக் குடித்தபடி
மட்டற்ற மகிழ்வுடன் வெளியேறின....
ஆனால் பாவம்...
அங்கே குற்றுயிரும்
குலையுயிருமாய் பரதமாதா....
புதன், 8 செப்டம்பர், 2010
மனிதம்...
சாலையெங்கும்
சிதறியபடி பல
மனிதப்புழுக்கள்...
ஆங்காங்கே
சிதறிக்கிடந்த
ரத்தக் கிறுக்கல்களுக்கு
மத்தியில் மெல்லிய
ஓலத்துடன் ஒரு உயிர்
அஸ்தமித்துக்கொண்டிருந்தது...
பற்பல கடமைகள்
நினைவினில் கோலம்போட...
கண்களில் லேசான கண்ணீர்
சில எதிர்ப்பார்ப்புகளோடு...
காப்பாற்றப்படுவோம் என்ற
நம்பிக்கையோடு...
ஊசலாடிக்கொண்டிருந்தது
அந்த உயிர்...
இன்றோ நாளையோ
ஊசலாடப்போகும்
ஏனைய உயிர்கள்
வேடிக்கை பார்த்தன...
பரிதாபத்தோடு பல...
பறிதவிப்பில் சில...
ரத்தம் கண்டதில்
சித்தம் தொலைந்தபடி
சில பூச்சிகளென..
நிரம்பி வழிந்தது சாலை...
ஆனால் அந்த
உயிரைக் காக்க
ஒருவரும் தயாராயில்லை...
நிமிடங்கள் கடந்தன...
இப்போது
மரணமடைந்திருந்தது
மனிதம்...
சிதறியபடி பல
மனிதப்புழுக்கள்...
ஆங்காங்கே
சிதறிக்கிடந்த
ரத்தக் கிறுக்கல்களுக்கு
மத்தியில் மெல்லிய
ஓலத்துடன் ஒரு உயிர்
அஸ்தமித்துக்கொண்டிருந்தது...
பற்பல கடமைகள்
நினைவினில் கோலம்போட...
கண்களில் லேசான கண்ணீர்
சில எதிர்ப்பார்ப்புகளோடு...
காப்பாற்றப்படுவோம் என்ற
நம்பிக்கையோடு...
ஊசலாடிக்கொண்டிருந்தது
அந்த உயிர்...
இன்றோ நாளையோ
ஊசலாடப்போகும்
ஏனைய உயிர்கள்
வேடிக்கை பார்த்தன...
பரிதாபத்தோடு பல...
பறிதவிப்பில் சில...
ரத்தம் கண்டதில்
சித்தம் தொலைந்தபடி
சில பூச்சிகளென..
நிரம்பி வழிந்தது சாலை...
ஆனால் அந்த
உயிரைக் காக்க
ஒருவரும் தயாராயில்லை...
நிமிடங்கள் கடந்தன...
இப்போது
மரணமடைந்திருந்தது
மனிதம்...
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)